ஊட்டி, ஆக. 22: ஊட்டியில் மாறுபட்ட காலநிலையால் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் பெய்து வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆண்டு தோறும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இது போன்ற சமயங்களில் ஊட்டியில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்வது வழக்கம். இம்முறை ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் பெய்யாத நிலையில், மாறாக வெயிலின் தாக்கம் இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது.