ஈரோடு, ஆக. 22: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் மணிகண்டன் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, செல்லகுமாரசாமி, மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், வட்டார தலைவர் நடராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கட்சி சார்பில் ராஜிவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.