புதுக்கோட்டை, ஆக.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து துறைகள் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக கீரனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 கார்கள் மோதி விபத்தை ஏற்படுத்தி 5 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதுபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். சில இடங்களில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் அஜாக்கரதையாக ஏற்பட்ட விபத்துகள் என்று அந்தந்த விபத்துகள் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர். விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் கட்டாயமாக காயத்துடன் தப்பித்து இருக்கலாம்.