அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாயல்குடி, ஆக. 20:  கடலாடி அருகே சாத்தங்குடி ஆறுமுகமாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலாடி அருகே சாத்தங்குடி விநாயகர், ஆறுமுகமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. முதல் காலம் முதல் மூன்றாம் கால பூஜைகள் வரை நடந்தது. நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜைகள் மற்றும் வேத பாராயணம், தீபாராதணை யாத்ராதானம் நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டது. கருடன் வந்ததும் கோயில் கோபுரம் மற்றும் கோபுர விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: