ராமநாதபுரம், ஆக.20: ராமநாதபுரம் அருகே தெற்குதரவை கிராமத்திற்கு செல்லும் வழியில் கடந்த சில நாட்களாக இரவில் வீட்டுக்கு செல்லும் வியாபாரிகளை மர்ம நபர்கள் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி பணத்தை வழிபறி செய்து வருகின்றனர். இதை தடுக்க கோரி ப்பகுதியை சேர்ந்த 10 கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் 11 கலுங்கிலிருந்து 3 கி.மீ. தொலைவில் தெற்குதரவை கிராமம் உள்ளது. கிராமத்திலிருந்து அனைத்து தேவைகளுக்கும் மற்றும் வியாபாரத்திற்கும் தினமும் ராமநாதபுரம் சென்று வருகிறோம். நகர் பகுதியில் தொழில் செய்யும் வியாபாரிகள் தங்களது தொழிலை முடித்து கொண்டு இரவில் பணத்தோடு வரவேண்டியுள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் தங்களது டூவீலர்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி கொண்டு தனியாக வருபவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் தங்களிடம் தெற்குதரவை முஸ்லிம் ஜமாத் சார்பாக கடந்த மாதம் 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் கொலை வெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.