மின் வயர் திருடிய 2 பேர் கைது

ஒரத்தநாடு, ஆக. 20: ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், சமயன்குடிக்காடு, காவரப்பட்டு, வன்னிப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் சமீப காலங்களாக ஆழ்குழாய் கிணற்று மின் இணைப்பில் உள்ள காப்பர் வயர்களை நள்ளிரவில் திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வநதது.இந்நிலையில் ஒக்கநாடு கீழையூர் வடக்கு தெருவில் வசிக்கும் அப்பு மகன் அன்பழகன் என்பவரது சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் மின் வயர்களை சமயன்குடிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தராசு மகன் சூரியபிரகாஷ் (17), தண்ணீர்மலை மகன் ஆகாஷ் (18) ஆகியோர் திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்து 2 பேரையும் பிடித்து போலீசில் அன்பழகன் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து சூரியபிரகாஷ், ஆகாஷ் ஆகியோரை கைது செய்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல மாதங்களாக விவசாயிகளின் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்வயர், மின்சாதனங்களை பல கிராமங்களில் திருடி, ஒக்கநாடு கீழையூர் ஷாகீர் உசேன் என்பவரின் பழைய இரும்புக்கடையில் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஷாகீர் உசேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: