பெரம்பலூர் அருகே

பெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூர் அருகேயுள்ள துறையூர் சாலையில் செஞ்சேரி கிராமஎல்லை க்கு உட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவ தாக, பெரம்பலுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில், பெரம்பலூர் போலீஸார் செஞ்சேரி எல்லைக்குட்பட்ட துறையூர்சாலையில் உள்ள ஒருவீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்குள்ள சசி குமார்(44) என்பவரது வீட் டில், பணம் வைத்து சூதாட் டம் ஆடிய பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த செல்வராஜ் (43), பரமசிவம்(45), முத்து சாமி(40), ராஜா(35), சதீஷ் (40), மகேந்திரன்(34), வசீகரன்(47), ராமசாமி(45), ராஜ சேகர்(28), தனசேகர்(45), முத்துசாமி(38) உட்பட 14 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து சூதாடுவற்கு பயன்படுத்திய ரூ24 ஆயி ரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சசிக்குமார் உள்ளிட்ட 14பேரும் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவி க்கப்ப ட்டனர்.

Related Stories: