ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை

பாடாலூர், ஆக. 20: செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை நடந்தது.ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் குபேர பெருமானின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும், குபேர ஹோமம், சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள குபேரன் சன்னதியின் முன் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடந்தது.இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Related Stories: