ஈரோடு, ஆக.20: ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பெரிய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும்.