காஞ்சிபுரம், ஆக.20: காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளலூர் கிராம மக்கள் கலெக்டர் பொன்னையாவிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர் ஊராட்சியில் ஏரி உள்வாய், நீர்நிலை புறம்போக்குகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த இடத்தை படுநெல்லி, புள்ளலூர், மூலப்பட்டு, ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், 80 ஏக்கர் மேய்க்கால் நிலம் தண்டலம், பள்ளம்பாக்கம், புள்ளலூரை சேர்ந்த சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதிகளில் நூறுநாள் வேலை செய்ய முயற்சி செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.