பெரம்பலூர்,ஆக.14: பெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி நாளை(15ம்தேதி) கிராம சபை கூட்டங்கள் நடை பெறுகிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (15ம்தேதி) சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சி களிலும் கிராமசபைக் கூட் டம் ஊராட்சித் தனி அலுவ லர்களால் நடத்தப்பட உள் ளது.இதில் ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளி லும், கட்டி முடிக்கப்பட்டு ள்ள கழிப்பறைகளைப் பய ன்படுத்துதல் மற்றும் பயன் படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபைக் கூட் டத்தில் வாசிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிமன்றத் தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும்.