ஜெயங்கொண்டம், ஆக. 14: தரமாக பணி மேற்கொள்ளுமாறு ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் பாரத பிரதமர் திட்டத்தின்கீழ் போடப்பட்ட சாலையை சீரமைக்க வந்த லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரத பிரதமர் திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டுக்கு முன் இந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த 6 மாதத்துக்குள் குண்டும் குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.