திருத்தணியில் அம்மன் கோயில்களில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி, ஆக. 14: திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோவில்) நேற்று ஜாத்திரை விழா நடந்தது. விழாவை ஓட்டி காலை, 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.   தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை, 4 மணிக்கு பூ கரகம் பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. இரவு, 7மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் திருத்தணி மேட்டுத்தெரு எல்லையம்மன், அக்கைய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆர்.,நகர் எல்லையம்மன், பெரியார் நகர் அம்மன், சுப்பிரமணிய நகர் துர்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் மற்றும் புறவழிச்சாலையில் உள்ள, ஆதிபராசக்தி அம்மன் உள்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா நடந்தது. விழாவை ஓட்டி, காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அம்மன் ஊர்வலம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு நாடகம் மற்றும் கச்சேரி நடந்தது.

Related Stories: