சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

திருவள்ளூர், ஆக. 11:திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் டிஆர்பிசிசி இந்து மேல் நிலைப்பள்ளி இணைந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்.திருவள்ளூர் டவுன் போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: