நத்தம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பரிதவிப்பு பாம்பு கடித்து மாணவன் சாவு

நத்தம், ஜூலை 23: நத்தம் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் மகேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகன் மதன்குமார்(14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மதன்குமார் கடந்த 16ம் தேதி ஊரின் ஒதுக்குப்புறமாக சென்ற போது விஷப்பாம்பு கடித்து விட்டது. ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: