பரமத்திவேலூர் டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

பரமத்திவேலூர், ஜூலை 23:  பரமத்திவேலூர் பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் (23). இவர் நேற்று முன்தினம் இரவு, தனது டூவீலரில் ஆனங்கூர் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  பரமத்திவேலூர் ஜேடர்பாளையம் சாலையில் சென்ற போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அருண்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி அருண்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: