100 நாள் வேலைக்கேட்டு ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

மண்ணச்சநல்லூர், ஜூலை 23: லால்குடி அருகே மாடக்குடி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைக்கேட்டுள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் வேலை கோரி மனு செய்த தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை வேலை வழங்காமல் அலைக்கழித்த வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாடக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: