ஊட்டி, ஜூலை 18: நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறியிருப்பதாவது:அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க இந்திய அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற அஞ்சல் தலை சேகரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மாணவர்கள் இடையே அஞ்சல் தலை மீதான நாட்டத்தை மற்றும் ஆராய்ச்சியை பொழுதுபோக்காக மாற்றுவது இதன் நோக்கமாகும். இத்திட்டத்தில் அஞ்சலக வட்ட அலுவலகங்கள் நடத்தும் அஞ்சல் தலை சேகரிப்பு சம்பந்தமான வினாடி வினா மற்றும் செயல்முறை திட்டம் மூலம் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பை பொழுதுபோக்காக வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்ெதாகை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயிலும் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மன்றம் இருத்தல் வேண்டும். மேலும் அந்த மன்றத்தில் மாணவர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். சேகரிப்பு மன்றம் இல்லாதபட்சத்தில் மாணவர்கள் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேகரிப்பு டெபாசிட் கணக்கு வைத்திருத்தல் வேண்டும்.