தொண்டி, ஜூலை 18: காவிரி பாசன பகுதியை பாதுகாக்க வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் வரும் 20ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. காவிரி பாசன பகுதியை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி வரும் 20ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற அழைப்பு விடுத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. தொண்டியில் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டம், சாகர் மாலா திட்டம் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும்.