மாவட்டம் மாலையில் படியுங்கள் 6 மாத நிலுவை தொகை கோரி அரசு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 18: மதுரை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க மாநிலத்தலைவர் முருகானந்தம் தலைமை  வகிக்க, அரசு ஊழியர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஊதியக்குழு நிர்ணயித்த 6 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான படிகள், போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் நன்றி கூறினார். ‘ஓபனிங்’ நல்லாதான் இருக்கு.. ஆனா ‘பினிசிங்’ சரியில்லையே...

Related Stories: