புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மாரிஅய்யா, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்.துரை ஆகியோர் தலைமை வகித்தனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளாக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்த கழக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை வெற்றி பெறும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அவரவர் ஒதுக்கப்பட்டள்ள பகுதிகளில் பணியாற்ற வேண்டும். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு பேரணியில் திரளானோர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் திமுக நகர செயலாளர் னைநாமுகமது, சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ உதயசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: