திருநின்றவூரில் வாரச்சந்தைக்கு அனுமதி வழங்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 18: திருநின்றவூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமாரிடம் அளித்துள்ள மனு விவரம் வருமாறு: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் காய், கனிகள், மளிகை சாமான்கள் விற்பனை சம்பந்தமான வாரச்சந்தை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு முறையான அனுமதி வேண்டி கடந்த 25.3.2019 அன்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மூலமாக மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி வாரச்சந்தை நடத்த உரிய அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு  அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: