பரமக்குடி, ஜூலை 16: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி அருகே பாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேச்சு,கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் சாதிக்அலி தலைமை தாங்கினார். பேச்சு,கட்டுரை,கவிதை, ஒவிய போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
கடலாடி அரசு மேல்நிலை பள்ளி, எம்.கரிசல்குளம் அரசு நடுநிலைப்பள்ளி,கடலாடி அரசு தொடக்க பள்ளி, நரசிங்க கூட்டம் அரசு தொடக்கப்பள்ளி, குருவாடி அரசு நடுநிலை பள்ளி, ஒப்பிலான் அரசு நடுநிலைப்பள்ளி, இளஞ்செம்பூர் அரசு நடுநிலைப் பள்ளி, உச்சிநத்தம் ஆறுமுக விலாஸ் இந்துமிசன் தொடக்கப்பள்ளி, முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தல் புனிதசூசைப்பர் தொடக்கப்பள்ளியில் நடந்தது.