பழநி நகரில் நாளை மின்தடை

பழநி, ஜூலை 16: மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக பழநி நகரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. பழநி உபமின் நிலையத்தில் நாளை (புதன்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மின் நிலையத்தில் இருந்து பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர், அ.கலையம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: