கல்லுாரி மாணவி தற்கொலை

திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் அருகே கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் பாடியூர் நாட்டாமைக்காரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவர் மனைவியுடன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் மாலதி(19), இவரது தங்கை கிருத்திகாவுடன் வசித்து வந்தார். மாலதி எரியோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலதி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என தெரியவில்லை. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: