கருங்கல், ஜூலை 16: கருங்கலை அடுத்த ெதாலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கடந்த 13ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுரேஷ்குமாரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை நைசாக கட்டர் வைத்து வெட்டி எடுத்துச் சென்றனர்.இதேபோல் தொலையாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரது மனைவி அணிந்திருந்த செயினை கட்டர் மூலம் வெட்டிய போது அவர் விழித்துக்கொண்டார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அதன்பின் அருகில் உள்ள மனோன்மணி என்பவர் வீட்டில் அதே மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் விழித்து சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடினார்.பிடிபட்டவரின் பாக்கெட்டில், சுரேஷ்குமார் மனைவி கழுத்தில் இருந்து வெட்டி எடுத்த தங்க செயின் இருந்தது. இதையடுத்து அவரை நையபுடைத்த ெபாதுமக்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், அவர் நித்திரவிளை அடுத்த எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் (27) என தெரியவந்தது.