படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஜூலை 12:  படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற ஆக.28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 30.6.2019 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரிகளில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது.

விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இதுபோன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவிதொகை பெற தகுதியற்றவர்கள்.

உதவிதொகையை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்கு புத்தகம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

Related Stories: