2ம் ஆண்டு, முதலாமாண்டுக்கான திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் 3ம் கட்ட மாணவர் சேர்க்கை

திருச்சி, ஜூலை 11: திருச்சி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (முழு நேரம்) பட்டய சேர்க்கையின்போது ஏற்பட்டுள்ள துறை வாரியான காலியிடங்களை 3ம் கட்ட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.திருச்சி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (முழு நேரம்) பட்டய சேர்க்கையின்போது ஏற்பட்டுள்ள துறை வாரியான காலியிடங்களை 3ம் கட்ட மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பிக்கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்குநரால் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து டிப்ளமோவிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150, எஸ்.சி, எஸ்டி பிரிவினர் சான்றொப்பமிட்ட சாதிசான்றிதழை கொடுத்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். நேரடி இரண்டாமாண்டு சேர கடைசி நாள் நாளை (12ம் தேதி), முதலாமாண்டு சேர வரும் 19ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: