திருச்சி, ஜூன் 27: திருச்சி மாவட்டத்தில், தேசிய மாதிரி ஆய்வுத்திட்ட 77வது சுற்றுக்கான சமூக பொருளாதார கணக்கெடுப்புப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.திருச்சி மாவட்டத்தில் 12 நகர்ப்புற மாதிரிகளிலும், 10 கிராமப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்புப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து அவர்களது சொந்த நிலம், கால்நடைகள், சாகுபடி பரப்பு, விவசாயக்கருவிகள், வரவு, செலவு, கடன் போன்ற பொருளாதார நிலைக்குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. எனவே, மக்களுக்குத் தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் புள்ளியியல் துறை களப்பணியாளர்களிடம் அவர்கள் கோரும் விவரங்களை தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பினை துல்லியமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.