திருச்சி, ஜூன் 27: நோய் பரப்பும் நுண்ணுர செயலாக்க மையத்தை கண்டித்து குப்பை கொட்டும் போராட்டம் அறிவித்த 3வது வார்டு மக்களிடம் ரங்கம் கோட்ட உதவி ஆணையர் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.திருச்சி ரங்கம் 3வது வார்டு பகுதியில் நுண்ணுர செயலாக்க மையம் உள்ளது. இந்த மையம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதிலிருந்து பறக்கும் குப்பையால் பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே நோய் பரவுவதை தடுக்க, நுண்ணுர செயலாக்க மையத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.