நாமக்கல், ஜூன் 27: நாமக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, வங்கி கடன், பெட்ரோல் ஸ்கூட்டர், வேலை வாய்ப்பு, அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, தையல் இயந்திரம், காதொலி கருவி, வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் என 70க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.