சாயல்குடி, ஜூன் 27: முதுகுளத்தூர் அருகே உடைகுளத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வரத்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. முதுகுளத்தூர் அருகே உடைகுளத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. வரத்து கால்வாய் முழுவதும் பெருக்கெடுத்து காட்டு பகுதியில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோரம் உள்ள சில கிராமங்களில் பொதுமக்களுக்காக சில இடங்களில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குழாயை உடைத்து விட்டு ஊரணியை பெருக்குதல், பருத்தி, கரிமூட்டம், புதிய கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தி வருவதால் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேருவதில்லை.