ராமநாதபுரம், ஜூன் 27: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, யூத் ரெட் கிராஸ், பெய்த் ஆராய்ச்சி மையம், உதயம் குடி போதை மறு வாழ்வு மையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலை பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். டிஆர்ஓ முத்துமாரி மற்றும் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் முன்னிலை வகித்தனர். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை எஸ்பி வெளியிட கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் ரெட் கிராஸ் சேர்மன் ஹாரூன், ரெட் கிராஸ் புரவலர் தேவி, உலகராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.