காஞ்சிபுரம், ஜூன் 27: உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். உடன் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி இருந்தார்.காஞ்சிபுரம் தேரடியில் தொடங்கிய பேரணி பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.