கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

கோவை, ஜூன் 26: குடிக்க பணம் கேட்டு மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் வேல்முருகன் (51) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி(41).அப்பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மே 20 ம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வேல்முருகன், சுப்புலட்சுமியை அடித்து கீழே தள்ளினார். இதில் தலையில்காயம் அடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி குணசேகரன், வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: