பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

ஈரோடு, ஜூன் 26: ஈரோட்டில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது (43). இவர், நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்மநபர் சாகுல்அமீதை வழிமறித்து, தான் இந்த ஏரியா ரவுடி, மது அருந்த பணம் கொடு என கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சாகுல் அமீது ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் மணிகண்டன் (27) என தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

Related Stories: