ஈரோடு, ஜூன் 26: ஈரோட்டில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது (43). இவர், நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்மநபர் சாகுல்அமீதை வழிமறித்து, தான் இந்த ஏரியா ரவுடி, மது அருந்த பணம் கொடு என கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.