சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 26: சாலையோர தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூரில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் நகராட்சி பகுதியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையோரத்தில் பழக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்த தொழிலாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தொழிலாளர் சட்டத்தின் படி நகராட்சி நிர்வாகம் நடந்து கொள்ள வலியுறுத்தியும், திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்புடைய சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: