மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் ேபாக்சோவில் கைது ஆசை வார்த்தை கூறி உல்லாசம்

திருப்பத்தூர், ஜூன் 26: படிக்க உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை திருவள்ளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்தாண்டு 9ம் வகுப்பு முடித்த மாணவி தற்போது சென்னையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களின் பரிசோதனையில் மாணவி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது மாணவி, தனது உறவினர் வீட்டில் தங்கி படித்தபோது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன்(20) என்பவர் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தன்னிடம் உல்லாசத்தில் ஈடுபட்டார் என தெரிவித்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிந்து லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: