பாபநாசம் அருகே மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம், ஜூன் 25: பாபநாசம் அருகே கோபாலபுரத்தில் அய்யம்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டிகளை மறித்து சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரத்தில் கபிஸ்தலம் போலீசார் ரோந்து சென்றபோது அவ்வழியாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: