பாபநாசம், ஜூன் 25: பாபநாசம் அடுத்த மெலட்டூர் கோவிந்தபுரத்தில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. தாசில்தார் மோகன், வட்ட வழங்கல் அலுவலர் சீமான், துணை தாசில்தார் தர்மராஜ், ஆர்ஐ கலையரசி, கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் பங்கேற்றனர். முகாமில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக 22 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டது, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.