ராமநாதபுரம், ஜூன் 25: முதுகுளத்தூர் தாலுகா கோனேரியேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், முதுகுளத்தூர் தாலுகா கோனேரியேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசிடமிருந்து நலத்திட்டங்கள் ஏதுவும் கிடைக்கப் பெறுவதில்லை. நாங்கள் இந்த கிராமத்தில் குடிநீருக்காக போர்வேல் கிணறுகள் ஏதும் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம். தண்ணீர் இல்லாத நிலையில் தொற்றுநோய் ஏற்படும் என்ற அபாயகரமான சூழ்நிலை உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் முதியோர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மயக்கம் அடைந்து விழுகிறார்கள். இதுபோன்ற நிலை கிராமத்தினரை மிகவும் வேதனையடைய செய்கிறது.