ராமநாதபுரம், ஜூன் 25: மரைக்காயரபட்டிணம் கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் கடந்த சில வருடங்களாக மின்சார பற்றாக்குறையால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. முக்கிய காரணமாக ஊரில் 450 மின் இணைப்புகள் இருந்தும் அதற்கு ஏற்றவாறு மின்சாரம் சரிவர கிடைக்க வில்லை. அனைத்து இணைப்புகளுக்கும் 150 வோல்ட் மின்சாரமே கிடைக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. பொதுமக்களாகிய நாங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் மின் சாதனப் பொருட்களையும் இழந்து பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.