ராமநாதபுரம், ஜூன் 25: பரமக்குடி தாலுகா பாம்பு விழுந்தான் பர்மா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் குடியிருப்பு வீடுகளுக்கு அருகே புதிய மதுபானக்கடை திறக்கும் திட்டத்துடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நேரில் வந்து இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்து சென்றுள்ளார். அந்த இடத்தில் மதுக்கடைகளை திறக்க திட்டமும் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த இடத்தில் மதுபான கடை திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெண்கள் வீட்டுக்கு வெளியே வர அச்சமான சூழ்நிலை ஏற்பட்டு விடும்.