திருப்பரங்குன்றம், ஜூன் 25: திருநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன், தெற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா உள்ளிட்டோர் சைக்கிளில் காலிக்குடங்களை தொங்கவிட்டபடி ஹார்விபட்டியில் இருந்து திருநகருக்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.