ஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பா.தேவிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழக அரசு உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.