பழநி, ஜூன் 25: பழநியில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பழநி 31வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நகர்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமை வகித்தார். வார்டு கிளைச் செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழநி நகராட்சி 31வது வார்டில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களை புதியதாக கட்டி கொடுக்க வேண்டும். சாலைகள் முழுவதும் புதியதாக அமைக்க வேண்டும்.