ஊத்துக்கோட்டை, ஜூன் 25: பாலவாக்கம் பகுதியில் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்க கோரி சாலை மறியல் செய்ய பொதுமக்கள் முயற்சித்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம், தாராட்சி ஆகிய கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களின் ஊர் எல்லை மற்றும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை நெடுஞ்சாலைத் துறை மூலம் விபத்துக்களை தடுக்க சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை அமைத்த பிறகு அதன் மீது வெள்ளை அடித்தும், அதன் அருகில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும். ஆனால் இதை நெடுஞ்சாலை துறையினர் செய்யவில்லை.