கூடுவாஞ்சேரி, ஜூன் 25: கூடுவாஞ்சேரி அருகே, நடந்த வாகன விபத்தில், புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் வசித்தவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகணேஷ் (30). திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. தேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், செல்வகணேஷ் அரியலூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கிருந்து, தனது தந்தை அன்பழகனுடன் (60), பைக்கில் நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டார்.