பொறுப்பேற்றார் விஜயகாந்த்

ராமநாதபுரம், ஜூன் 21: ராமநாதபுரம்   டிராபிக் ஆர்ஐ விஜயகாந்த் கடந்த மே 15ம் தேதி கேணிக்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி பிடித்தார். அப்போது வண்டியை ஓட்டிவந்த கர்ணனுக்கும்(52) அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் டிரைவர் கழுத்தில் கடித்ததில் பலத்த காயமடைந்த விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காயம் குணமடைந்ததால் நேற்று மீண்டும் டிராபிக் ஆர்ஐ.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரை கடித்த டிரைவர் கர்ணன் தற்போது ஜாமீனில் உள்ளார்.

Related Stories: