மதுரை, ஜூன் 21: தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத அதிமுக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பழங்காநத்தம் சந்திப்பில் நாளை காலை 10 மணிக்கு பொறுப்புகுழு தலைவர் தளபதி தலைமையில் ஆர்ப்பாடடம் நடக்கிறது. இதில் மாநகர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட செயலாளர், அனைத்து அணியினர் திரளாக பங்கேற்கும்படி தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.